வெல்லாவெளியில் இளம்தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு.


(சசி துறையூர்) கெளரவ பிரதமரின் கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் பத்துலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அதன்  நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முயற்சி பயிற்சி செயலமர்வு.  வதிவிடமாக  கடந்த 27.02.2017 தொடக்கம் 03.03.2017 வரை ஜந்து நாட்கள் வெல்லாவெளி கலைமகள் மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனை வடக்கு, வெல்லாவெளி, மற்றும் மண்முனைதென்எருவில் பற்று பிரதேசங்களைச் சேர்ந்த 30 கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இந்த பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டனர்.

சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் திட்டமிடல் வங்கி கடன் பெறுவது தொடர்பாக விரிவுரை மற்றும் சொயற்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ கூட்டுறவுச்சங்கத்தின் பொது முகாமையாளர் திரு சா.கிருபைராசா , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவுச்சங்க உத்தியோகஷ்தர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாத இறுதியில் திருகோணமலையில் நடைபெறவுள்ள 7வது யொவுன்புரய நிகழ்வின் போது 250000.00 நிதி கடனாக வழங்கப்படவுள்ளதுடன் இந்த நிதியில் 50000.00 ரூபா மானியமாகவும் மீதி இரண்டு இலட்சம் மிகக்குறைந்த இலகு தவனை வட்டிக்கடனாக அறவிடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.