பலத்த மழைக்கு மத்தியிலும் பட்டதாரிகள் சத்தியாக்கிரகம் -இந்த வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும் என பிரதியமைச்சர் அமீர்அலி நம்பிக்கை

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்திற்குள் தீர்வினை வழங்குவதற்கு பிரதமர் நடவடிக்கையெடுப்பார் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

கோட்டும் மழையின் மத்தியிலும் ஒன்பதாவது தினமாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பில் கடுமையான மழைபெய்துவரும் நிலையிலும் காந்தி பூங்காவுக்கு முன்பாக பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

துமக்கான நியமனம் தொடர்பில் எழுத்துமூலமான உறுதிப்பாட்டை அரசாங்கம் வழங்கும் வரைக்கும் தமது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் இடத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.