சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிவானந்தா
உதைபந்தாட்ட – 2017 தொடர் 20.03.2017 ஆம் திகதி முதல் 20.04.2017 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு
மைதானத்தில் நடைபெறவுள்ளது .
இந்த உதைப்பந்தாட்ட தொடரானது சிவானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள், சிவானந்தா வித்தியாலய
பாடசாலை மாணவர்கள் மற்றும் கழகத்தின் மூத்தவீரர்களின் பங்கு பற்றுதலுடன் சிவானந்தா
விளையாட்டுக் கழகம் முதல் முறையாக நடாத்துகின்றது
இந்த போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கழக வீரர்கள் , பாடசாலை மாணவர்கள்
மற்றும் கழகத்தின் மூத்தவீரர்களில் 05 அணிகளாக பிரித்து லீக் முறையிலான போட்டியாக நடாத்தப்படுகின்றது
.
ஒவ்வொரு அணிகளுக்கிடையிலான போட்டியானது 20.03.2017 ஆம் திகதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 01 மணித்தியால நேரம்
கொண்ட போட்டியாக நடத்தப்படுகின்றது .
இந்த உதைபந்தாட்ட தொடரை கண்டுகளிக்க சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு வருகை
தந்து ஆதரவினை வழங்குமாறு மட்டக்களப்பு உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு அழைப்புவிடுக்கின்றனர்.