கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் விசேட திருப்பலி

யேசுசபை துறவி  அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின் 79வது  பிறந்த நாளை சிறப்பிக்கும் விசேட திருப்பலி இன்று மட்டக்களப்பு பார் வீதி தூய லூர்து அன்னை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது . 


மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஒழுங்கமைப்பில் யேசுசபை துறவி  அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின் தலைமையில் இந்த விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது ,
இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக அங்கத்தவர்கள் மற்றும் லூர்து அன்னை ஆலய பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர் .

திருப்பலியின் பின் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின் 74வது  பிறந்த நாளை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது