(லியோன்)
மட்டக்களப்பு
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் (25) சனிக்கிழமை
குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாமாங்கம் கிராம சேவை பிரிவை சேர்ந்த சபாபதி. ஜெயக்காந்தன் (வயது 36) ஒரு
பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு மாமாங்கம் பகுதியில்
புகையிரத பாதைக்கு அருகில் உள்ள மரம்
ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (24) வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் வெளியேறிய நிலையில் (25) சனிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (24) வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் வெளியேறிய நிலையில் (25) சனிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு
மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி
ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிசார் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.