(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றைய தினம் (02.12.2016) சுமுகமான முறையில் இடம் பெற்றுள்ளது. 57 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 12வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு
45 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 14 வேட்பாளர்களும்
கல்குடா தேர்தல் தொகுதியில் 20 வேட்பாளர்களும்
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இம் முறை இளைஞர் யுவதிகள் பெரும் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கலில் ஈடுபட்டமையினையும் அவதானிக்க முடிகிறது.
அத்தோடு இத் தேர்தலில் விசேடமாக பெண்களும் போட்டியிட முன்வந்தமை பெரும் வரவேற்புக்குரிய ஒன்றாக சமூக ஆர்வலர்களால் நோக்கப்படுகின்றது.
மேலும் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலிருந்தும் மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
45 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 14 வேட்பாளர்களும்
கல்குடா தேர்தல் தொகுதியில் 20 வேட்பாளர்களும்
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இம் முறை இளைஞர் யுவதிகள் பெரும் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கலில் ஈடுபட்டமையினையும் அவதானிக்க முடிகிறது.
அத்தோடு இத் தேர்தலில் விசேடமாக பெண்களும் போட்டியிட முன்வந்தமை பெரும் வரவேற்புக்குரிய ஒன்றாக சமூக ஆர்வலர்களால் நோக்கப்படுகின்றது.
மேலும் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலிருந்தும் மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.