கோறளைப்பற்று கிண்ணையடி இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சி கருத்தரங்கு.

(சசி துறையூர்)

 கிண்ணையடி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்,  பிளான் இன்டநெசனல் நிறுவனத்தின் அனுசரனையுடன்  இன்று வியாழக்கிழமை    (  8/12/2016)
மட்/ககு/கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலத்தில் இளைஞர் யுவதிகளுக்கான  தொழில்வழிகாட்டல் கருத்தரங்கொன்று நடைபெற்றது.

கிண்ணையடி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு செ.செந்தில்குமார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 60க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர் .

இந்த நிகழ்வுக்கு கிண்ணையடி கிராம உத்தியோகஸ்த்தர்      
திரு K.கஜேந்திரராஜா அவர்களும் ,            மட்/ககு/கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய    பிரதி அதிபர்





திரு K.கலைப்பிரியன்  ,மனிதவள உத்தியோகஸ்த்தர் திருமதி K.சிவாநந்தன், மற்றும்   சங்கத்தின்  பொருளாளர் A.வினோத்  உபதலைவர்
 A.ஜுவபிரதீப்  மற்றும் உறுப்பினரான திரு T.சந்திரகாசன் , J.அருளேந்திரன் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும்  கலந்து கொண்டனர்.

 " சிறந்த தொழில் துறைகளினூடாக எமது சமூகத்தை முன்னேற்றுவோம்"   எனும் நோக்கம்  கருத்தரங்கின் பிரதான மையக்கருவாக  அமைந்தது.

 இந்த கருத்தரங்கிற்கு வளவாளராக
திரு A.சதானந்தன்  (தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர்) திரு A.உதயதாசன் (நிகழ்ச்சி திட்ட  உத்தியோகஸ்தர்) திரு M.H.M பைசல் (நிகழ்ச்சி திட்ட  உத்தியோகஸ்தர்)
ஆகியோர் கலந்து கொண்டனர்.