மட்டு கிரானில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியுடன் இரத்தப் பரிசோதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை.

(சசி துறையூர்) மட்டு கிரானில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியுடன் இரத்தப் பரிசோதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை.

 மட்டு கிரான் பிரதேசத்தில் இன்று  காலை
கோரளைப் பற்று கிரான் பிரதேச இளைஞர் கழக  சம்மேளனம், மற்றும் வேள்ட்விஷன் நிறுவனம் இணைந்து நடாத்திய மாபெரும் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த விழிப்புணர்வு  பேரணி காலை ஒன்பது மணிக்கு கிரான் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து பேரணியாக  கோரக்கல்லிமடு ரெஜி கலாச்சார மண்டபத்தை அடைந்தது.  அங்கு மட்டக்களப்பு மாவட்ட பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி அனுஷா சிறிசங்கர் அவர்களினால் விழிப்புணர்வு அறிவூட்டல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனையும் இடம் பெற்றது . முதலாவது இரத்தப் பரிசோதனையை கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்த பேரணியை  கிரான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திரு. அருணண் , சுகாதார வைத்திய அதிகாரி திரு ரி. ரவிச்சந்திரன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ரி.விந்தியன் வேள்ட்விஷன் நிறுவன முகாமையாளர் கிந்து றோகாஸ், கோரளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின்  சம்மேளனத் தலைவர் செல்வன் கே.தினேந்திரன் ஆகியோருடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இந் நிகழ்வில் அதிகளவான இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்த கொண்டனர்.