கிரானில் நாளை மாபெரும் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி .

(சசி துறையூர்) கோரளைப் பற்று கிரான் பிரதேச இளைஞர் கழக  சம்மேளனம், மற்றும் வேள்ட்விஷன் நிறுவனம் இணைந்து மாபெரும் எச் ஜ வி எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி ஒன்றினை நாளை வெள்ளிக்கிழமை  (09.12.2016) காலை 09.00 மணியளவில்  நாடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை அலுவலர் திரு தங்கராசா விந்தியன் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு  பேரணி காலை ஒன்பது மணிக்கு கிரான் சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து பேரணியாக சென்று கோரக்கல்லிமடு ரெஜி கலாச்சார மண்டபத்தை அடைந்து அங்கு விழிப்புணர்வு செயலமர்வு இடம் பெற்று இலவச இரத்த பரிசோதனையும் இடம் பெறவுள்ளது,

மேலும் இந்த பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை, கிரான் பிரதேச செயலாளர் கே.தனபால சுந்தரம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் MLMN.நைறூஸ், வேள்ட்விஷன் நிறுவன முகாமையாளர் கிந்து றோகாஸ், கோரளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின்  சம்மேளனத் தலைவர் செல்வன் கே.தினேந்திரன் ஆகியோர்  கலந்து கொள்ளவுள்ளதுடன்.

கிரான் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அனைத்து உத்தியோகஷ்தர்கள்,  இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக இளைஞர் சேவை அதிகாரி மேலும் தெரிவித்தார்.