மட்டக்களப்பு முகத்துவாரத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியொகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாமாங்கம் பிரதேசத்தினை சேர்ந்த ரி.சிவதாஸ்(47வயது)என்பவரின் சடலமே முகத்துவாரத்தில் நீரில் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இவர் கல்லடி பாலத்தில் இருந்து தொலைபேசி மூலம் சிலருடன் தொடர்புகொண்டு கதைத்ததாகவும் இன்று காலை கல்லடிப்பாலத்தில் அவரது ஆடைகள் சிலவும் அடையாள அட்டையும் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அவரை உறவினர்களும் பொலிஸாரும் தேடிவந்த நிலையில் இன்று காலை சடலத்தை மீனவர்கள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தாதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே நேற்று இரவு காணாமல்போனதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.