ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள் நேற்றைக்கு முன்தினம் அங்குள்ள கடற்படை தளபதியினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று திங்கட்கிழமை அம்பாறை மணிக்கூட்டு கோபுர சந்தியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிபலிக்கும் பல ஊடக அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண தொழில் சார் ஊடகவியலாளர் சங்கம், அம்பாறை மாவட்ட பௌத்த மத துறவிகள், அகில இலங்கை பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் உட்பட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு ஊடகவியலாளர்கள் தலையில் கறுப்பு பட்டியை அணிந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததோடு சுலோக அரசிக்கு எதிரான சுலோக அட்டைகளையும் தாங்கி கோசம் எழுப்பினர். முகிந்த அரசின் ஊடக அடக்குமுறை போன்று நல்லாட்சியிலும் ஊடக அடக்குமறையா, அரசே ஊடகம் மீது கைவைக்காதே, கடற்படை தளபதிக்கு பைத்தியமா? ஏன்ற சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.