வாகன விபத்தினால் மட்டக்களப்பின் சில பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிப்பு –சீர்செய்யும் பணிகளில் மின்சாரசபை

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வாகன விபத்தினால் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையினை சீர்செய்யும் பணிகளை இலங்கை மின்சாரசபையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று மாலை மட்டக்களப்பு –திருமலை வீதியில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த பிக்கப் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மின்சார தூண் சேதமடைந்ததுடன் பிக்கப் வாகனமும் சேதமடைந்திருந்தது.

இதன்காரணமாக திருப்பெருந்துறை உட்பட சில பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த மட்;டக்களப்பு பிராந்திய மின் அத்தியட்சர் பிரசாந்தன் தலைமையிலான குழுவினர் வானத்தை அப்புறப்படுத்தி மின்சாரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.