அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியின் வேலி தூண்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

 (லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்த மான காணியின் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள காணிப் பகுதியின்  பாதுகாப்புக்காக போடப்பட்ட வேலி தூண்கள்  சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக   மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  
.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச  செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்த மான காணியின் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள காணிப் பகுதியின்  பாதுகாப்புக்காக போடப்பட்ட  வேலி தூண்கள்   சில நபர்களால்  உடைக்கப்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பாக  ஆலய வண்ணக்கர்மார்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்   மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய  தலைவர்  மயில்வாகனம் அரசரட்ணம்  தெரிவித்தார் .


குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு  வருகை தந்த  மட்டக்களப்பு பொலிசார் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  மற்றும் அமிர்தகழி  கிராம சேவை உத்தியோகத்தர் பார்வையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் செய்யப்பட்டு  அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்