இறை இரக்கத்தின் திருத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

(லியோன்)

 இறை இரக்க ஆண்டினை சிறப்பிக்கும் புதிய ஆலயம் இன்று  மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் பகுதியில்  இறை இரக்க ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் புதிய இறை இரக்க ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் இறை இரக்கத்தின் திருத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டு புதிய ஆலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது .

இந்த புதிய ஆலயம் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளின்  அருட்தந்தையர்கள்  மற்றும் பங்கு மக்கள் முன்னிலையில் ஆலயம் ஆயரினால்  ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .


இந்த விசேட திருப்பலி  நிகழ்வில்  மறை மாவட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் , மறை மாவட்ட பங்கு மக்கள் , பக்தி சபையினர் என பலர் கலந்து சிறப்பித்தனர் .