மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலை சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி


(லியோன்)

மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டு  போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்கான  2016ஆம் ஆண்டுக்கான  முதலாவது கோட்டமட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட  “செயற்பட்டு  மகிழ்வோம்” சிறுவர்களுக்கான  விளையாட்டு போட்டியின் இறுதி போட்டியும் பரிசளிப்பு   நிகழ்வும் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இன்று  நடைபெற்றது .

மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் சுமார் 39 பாடசாலைகள் கலந்துகொண்டன.

கலந்துகொண்ட பாடசாலைகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான பாடசாலை மாணவர்களுக்கான இறுதி போட்டி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும்  இன்று நடைபெற்றது .  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். டி .எ .நிசாம் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய  நிருவாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி . கோவிந்தராஜா , ஏறாவூர் பற்று  கோட்டக்கல்விப் பணிப்பாளர் , எம் .பாலசுப்பிரமணியம் ,மண்முனை பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் என் .தங்கவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டதுடன்  மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர் .


இந்த விளையாட்டு  போட்டி நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள்  , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்  .