(லியோன்)
மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட
சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி
நிகழ்வுகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி
வலயத்தின் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்கான
2016ஆம் ஆண்டுக்கான முதலாவது கோட்டமட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில்
நடத்தப்பட்ட “செயற்பட்டு மகிழ்வோம்” சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியின்
இறுதி போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்
மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு
இந்து கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது .
மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட
விளையாட்டு போட்டிகளில் சுமார் 39 பாடசாலைகள் கலந்துகொண்டன.
கலந்துகொண்ட பாடசாலைகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான
பாடசாலை மாணவர்களுக்கான இறுதி போட்டி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.
டி .எ .நிசாம் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு
வலய நிருவாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி
. கோவிந்தராஜா , ஏறாவூர் பற்று
கோட்டக்கல்விப் பணிப்பாளர் , எம் .பாலசுப்பிரமணியம் ,மண்முனை பற்று
கோட்டக்கல்விப் பணிப்பாளர் என் .தங்கவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர் .
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வில்
மண்முனை வடக்கு கோட்டமட்ட பாடசாலைகளின்
அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் என
பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .