(லியோன்)
ஓவியம் பாடம் கற்பது அழகியல்
சார்ந்த விடயமாகும் இதனூடாக தமது மனவளத்தை ,கற்பனையை ,படைப்பாற்றலை , சிந்தனை
ஆற்றலை , மனதை நல்வழி படுத்தி விருப்பங்களை வெளிபடுத்துகின்ற முக்கியமான பாடமாகும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி
.தவராஜா தெரிவித்தார்
சர்வதேச சிறுவர்
தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான அரச
சிறுவர் சித்திர விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
கலாசார அதிகார சபையினால் சர்வதேச சிறுவர்
தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான அரச சித்திர போட்டி விழா
மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது .
இந்த சித்திரப் போட்டியானது
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட
மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டது .
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் ,
சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் , போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதேச
செயலாளர் உரை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார் .
இன்றைய சூழ்நிலையில் சித்திரப்பாட ஆசிரியர்கள் சித்திர பாடத்தில் கூடிய அக்கறை செலுத்தாமல் விடுவதும்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சாதாரண தரத்தில் குறைந்த பெறுபேறுகளை பெற்று
விடுவார்கள் என்கின்ற சூழ்நிலையிலே இந்த சித்திர பாடத்தினை கற்பதற்கு
விடுவதில்லை .
இதன் காரணமாக இந்த ஓவிய துறையினை கற்பதற்கு பிற பிரதேசங்களில் இருந்து
இங்கு வந்து கற்க கூடிய சூழ் நிலை உருவாக்கி கொண்டு வருகின்றது .
ஆகவே ஆசிரியர்களும்
,பெற்றோர்களும் பிள்ளைகளை ஓவிய
பாடத்திலும் கவணம் செலுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் .
இந்த ஓவியம் பாடம் கற்பது என்பது அழகியல் சார்ந்த விடயமாகும் இதனூடாக
தமது மனவளத்தை ,கற்பனையை ,படைப்பாற்றலை , சிந்தனை ஆற்றலை , மனதை நல்வழி படுத்தி விருப்பங்களை
வெளிபடுத்துகின்ற முக்கியமான பாடமாகும் .
எனவே மாணவர்கள் இந்த சித்திர பாடத்திலும் கவணம் செலுத்த வேண்டும் என
கேட்டுக்கொண்டார் .
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக
அலுவலக உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு
பிரதேச செயலக கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்
கலந்துகொண்டனர் .