பட்டிப்பளை பிரதேச இளைஞர் முகாம் பிற்போடப்பட்டுள்ளது

 (சசி துறையூர்)

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இன்று தாந்தமலை முருகன் ஆலய அன்னதான மடத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த பிரதேச இளைஞர் முகாம் சீரற்ற கால நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை அதாகாரி அமரசிங்கம் தயாசீலன் தெரிவித்தார்.

மேலும்  மிக குறுகிய காலத்துக்குள் எதிர்வரும் ஒரு சில தினங்களுக்குள் முகாம் நடைபெறும் எனவும் அதற்கான காலம் இட விபரம் முற்கூட்டியே இளைஞர் கழகங்களுக்கு அறிவீக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.