துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை.

(சசி துறையூர்) துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நாளை 30,11,2016 புதன் கிழமை பி.ப 02.00 மணிக்கு பாடசாலை விளையாட்டு முற்றத்தில் நடைபெறவுள்ளது.


வித்தியாலய அதிபர் திரு அ.மனேகரன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், முதன்மை அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் கலந்து கொள்ளவுள்ளதோடு, பட்டிருப்பு வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்),     திரு.எம் உலககேஸ்பரம் , பிரதிக்கல்விப் பணிப்பாளர் (முகாமைத்துவம்) செல்வி கே.ஜெயந்திமாலா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திரு.ஏ.எம்.ஹசீன் ஆகியோர் அதி விசேட அதிதிகளாக கலந்து கொள்வுள்ளனர்.

இந் நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளோடு , உடற்பயிற்சி கண்காட்சி கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.