மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  நோயாளிகளின் அதிகரிப்பினால் வைத்தியசாலையில்  நிலவுகின்ற சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவருமான ராஜன் மயில்வாகனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் பெஸ்டிவல்  கிரிகெட் ஒப் சிறிலங்கா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால்  ஒரு தொகை சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எம் இப்ரா லெப்பை தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பாரியாரும், சுகாதார அமைச்சின்  பிரத்தியோக செயலாளருமான திருமதி சுஜாதா சேனாரத்ன அதிதியாக கலந்துகொண்டு சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு வழங்கி  வைத்தார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்