தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

செலான் வங்கி மட்டக்களப்பு கிளையினால் நடத்தப்பட்ட  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட  பாடசாலை மாணவர்களில்  செலான்  வங்கியின் மட்டக்களப்பு கிளையில் சேமிப்பு  கணக்கினை வைத்துள்ள மாணவர்களில் 2015  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு பரிசில்களும் ,சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர்   கே .ராஜேந்திரா  தலைமையில்  மட்டக்களப்பு  மகாஜன கல்லூரி மண்டபத்தில் (18)  வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்வின் போது  அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் , பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில்   பிரதம விருந்தினர்களாக  கிழக்கு பிராந்திய சிறிலங்கா டெலிகொம் பிரதி முகாமையாளர் வை . கோபிநாத் , மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா  மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .