(லியோன்)
மட்டக்களப்பு கல்விவலய பாடசாலைகளில் கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில்
சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
இந்நிகழ்வினை சிறப்பிக்கும்
வகையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித
ஜோசெப்வாஸ் வித்தியாலயத்தில் அதிபர் சுதாகரன் தலைமையில் சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு சிறப்பு
ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ
.தேவதாசன் , மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ஏலக்ஸ்
ரொபட் , அருட்சகோதரிகள் , மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய வின்சன்ட்
டி போல் சபை உறுப்பினர் ஜே .எச் .
ரட்ணராஜா ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள்
உட்பட பலர் கலந்துகொண்டனர் .