போரதீவுப் பற்று பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் முகாம் நாளை 11,11,2016 வெள்ளிக்கிழமை பி.ப 03.30 மணிக்கு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படும்.

(சசி துறையூர்) போரதீவுப் பற்று பிரதேச  இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் முகாம் எதிர் வரும் 11,11,2016 வெள்ளிக்கிழமை பி.ப 03.30 மணிக்கு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில்  ஆரம்பிக்கப்படும் என பிரதேச இளைஞர் சேவை அலுவலர் எஸ். அருளானந்தம் தெரிவித்தார்.

இந்த இளைஞர் முகாமில்
பங்கு பற்ற ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் இளைஞர் சேவை அலுவலரையோ அல்லது சம்மேளன தலைவரையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.