(லியோன்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பகுதியில் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடமாடிய நபர் ஒருவருக்கு 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாய சேவையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
.மட்டக்களப்பு -
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பகுதியில் பொலிசார் மேற்கொண்ட ரோந்து
நடவடிக்கையின் போது மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு
திங்கள்கிழமை
(07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் .
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து
குறித்த நபருக்கு 5 வருட
ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனையும்
6000 ரூபா தண்டப்பணமும் 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாய சேவையில்
ஈடுபடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்..