எம்மை மகிழ்ச்சிப்படுத்துவோரை நாங்கள் மகிழ்ச்சி படுத்தவேண்டும் -புனித மைக்கேல் கல்லூரியில் ஒளிவிழா

எம்மை மகிழ்ச்சிப்படுவத்துவோரை நாங்கள் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்படவேண்டியது மாணவர்களின் பொறுப்பாகும் என அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் ஜேசுகிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் இன்று காலை ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

பாடசாலை அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜேசு கிறிஸ்துவின் மகிமையினை குறிக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

ஒளிவிழாவின் சிறப்பு நிகழ்வான ஜேசுகிறிஸ்துவின் பிறப்பு செய்தியினை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் வழங்கியதுடன் நத்தார் பாப்பாவும் வருகைதந்து ஆடிப்பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.