“தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ( VIDEO & PHOTOS)

(லியோன்)

“தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.  

தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் வங்கி முகாமையாளர்  எஸ்.வி. சுவேந்திரன் தலைமையில் மக்கள் சூரியகதிர் மூலம் மின்சக்திய பெற்றுக்கொள்ளும்  திட்டத்தின் கீழ் விழிப்புணர்வூட்டும்  நடைபவனி  இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது .

இதன்போது சூரியகதிர் மூலம் மின்சக்திய பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன .

இந்த விழிப்புணர்வு  நடைபவனியானது இன்று காலை  09.00 மணிக்கு ஆரம்பமாகி  பிரதான வீதி ஊடாக பஸ் தரிப்பிட நிலையம் வரை சென்று மீண்டும் பிரதான வீதி ஊடாக , திருகோணமலை வீதி , புகையிரத வீதி  தொடர்ந்து அரசடி வீதியூடாக  கல்முனை  வீதி , மீண்டும் பிரதான வீதி ஊடாக  நண்பகல் 11.00 மணியளவில் வங்கியை வந்தடைந்தது .


இந்த விழிப்புணர்வு  நடைபவனியில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய சேமிப்பு வங்கியின்  கிளை முகாமையாளர்கள் ,,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்