மாகாணசபைகள்
மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலின்படி ஒக்டோர் மாதம் 'வன ரோபா'
எனும் பெயரில் தேசிய மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு
அமைவாக எதிர்வரும் மூன்று ஆண்டு
காலத்துக்குள் நாட்டின் உள்ள காடுகளை 32%
வீதம் வரை அதிகரிப்பதற்கான இலக்கை எய்து கொள்ளும் வேலைத்திட்டத்தின்
அரச , அரசார்பற்ற மற்றும் தனியார் தரப்பினரின் முனைப்புடனான பங்களிப்புடன்
வருடாந்த நிகழ்ச்சி திட்டமாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வன ரோபா “ எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தேசிய மர நடுகை
வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மர நடுகையை முறையாக
அறிமுகப்படுத்தும் முகமாக ஒக்டோபர்
மாதம் “வன ரோபா “ தேசிய மர நடுகை மாதமாக
பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதன் கீழ் சகல மாவட்டத்தின் செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் பொருத்தமான
இடங்களை இனங்கண்டு மர நடுகை நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்க பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளது
இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .
உதயகுமார் தலைமையில் மர நடுகை நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் பிரதான வீதி ஓரங்களிலும் , மட்டக்களப்பு வெபர்
மைதானத்தை அன்றிய பகுதிகளிலும் இந்த மர
நடுகை நிகழ்வு நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் . பிரதி
ஆணையாளர் என் .தனஞ்சயன் . மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் என பலர்
கலந்துகொண்டனர் .