(லியோன்)
சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
இன்று காலை 09.00
மணியளவில் மட்டக்களப்பு
புனித மைக்கல் கல்லூரி அருகில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் மண்முனை
வடக்கு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது .
இதனை தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் மதுபானம்
மற்றும் போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் உடல் உள ரீதியான பாதிப்புகள் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் விதவராஜா , வளவாளர்களாக மாவட்ட செயலக
சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி . குகதாசன்
,கல்லடி விமோச்சனா இல்ல பணிப்பாளர் மற்றும் எஸ்கோ நிறுவன பிரதிநிதி எஸ் .சிவா ,
மண்முனை வடக்கு பிரதேச செயலக
சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்
எஸ் .உதயராஜ் , வைத்தியர் ரமேஷ் ஜெயகுமார் ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , சிவில்
குழு பொலிஸ் முத்தியோகத்தர்கள் , புனித மைக்கல் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி
மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .