மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயலக பிரிவு அரச அலுவலர்க்கான திறன் மற்றும் ஆளுமை விருத்திக்கான இரண்டு நாள் செயலமர்வு பொலன்னறுவையில்.

மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில் கடமை புரியும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு 03,10,2016 தொடக்கம் 04,10,2016 வரை பொலன்னறுவை ஹெரி டேஜ் விடுதியில் இடம் பெற்றுள்ளது.

அபிவிருத்தியில் இளைஞர்  யுவதிகளின்  பங்களிப்பை மேம்படுத்துதல் செயலமர்வு கருப்பொருளாக அமைந்துள்ளது.

இச் செயலமர்வில் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள், உற்பத்தி திறன் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், கலாச்சார உத்தியோகஸ்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்  கலந்து கொண்டனர்.

ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசொப் நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் பிளான் சர்வதேசம் நிறுவனம் இவ் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.