மகாஜன கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   மகாஜன  கல்லூரியில்   நிர்மாணிக்கப்படவுள்ள   விஞ்ஞான தொழில்நுட்ப   ஆய்வு கூடத்திற்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது .


 நாட்டை  அறிவின்  கேந்திரமாக  அபிவிருத்தி  செய்யும்  நோக்காக கொண்டு  1000  இடைநிலைப்   பாடசாலைகளையும்  5000  ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி  செய்யும்   தேசிய  வேலைத்திட்டத்திற்கு அமைவாக  தெரிவு  செய்யப்பட   1000  பாடசாலைகளை  மீளமைக்கும் தேசிய  நிகழ்ச்சித் திட்டத்தின்  கீழ்  கல்வி  அமைச்சின்  நிதி  ஒதுக்கீட்டின் மூலம் விஞ்ஞான  தொழில்நுட்ப    ஆய்வு  கூடங்கள்   நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது .

இதன்  கீழ்   மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள  விஞ்ஞான தொழில்நுட்ப  ஆய்வு   கூடத்திற்கான  அடிக்கல்  நாட்டும்  நிகழ்வு    கல்லூரி அதிபர் திருமதி  .துரைராச சிங்கம்   தலைமையில்    நடைபெற்றது . .


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு  மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்களான    ஞா ஸ்ரீநேசன்  எஸ் . யோகேஸ்வரன் , எஸ் . வியாலேந்திரன் , கிழக்குமாகாண சபை உறுப்பினர்  இரா .துரைரட்ணம்,   ,  மட்டக்களப்பு  வலயக்கல்விப் பணிப்பாளர் கே . பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  .சுகுமாரன் , ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி டேவிட்  மற்றும்   பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்   உட்பட  பலர்  கலந்துகொண்டனர்.