(லியோன்)
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
.
நாட்டை அறிவின் கேந்திரமாக அபிவிருத்தி செய்யும் நோக்காக கொண்டு 1000 இடைநிலைப் பாடசாலைகளையும் 5000 ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட 1000 பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி
அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஞ்ஞான தொழில்நுட்ப
ஆய்வு கூடங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில்
நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள
விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி .துரைராச சிங்கம் தலைமையில் நடைபெற்றது . .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
ஞா ஸ்ரீநேசன் , எஸ் . யோகேஸ்வரன் , எஸ் . வியாலேந்திரன் , கிழக்குமாகாண சபை உறுப்பினர் இரா .துரைரட்ணம், , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே . பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , ஓய்வுநிலை
கோட்டக்கல்வி அதிகாரி டேவிட் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,
பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.