நீதிபதியின் முயற்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம்

(லியோன்)

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 
 
  

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்க அதிபரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்காக 20 ஏக்கர்  காணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் .

இதற்கு அமைய வழங்கப்பட்ட காணியில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு  புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவிகின்றார் .


இதேபோன்று மாங்குளத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கு நீதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக மாங்குளத்திலும் சுற்றுலா நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்குறிய நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ,