HDFC வங்கியின் 25வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் மாபெரும் இரத்ததான முகாம்

(லியோன்)

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று HDFC வங்கியில் நடைபெற்றது .


HDFC வங்கியின் 25வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் பி . ராஜராஜன் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு  கிளையில்  நடைபெற்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில்  இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால்  விடுக்கப்படுகின்ற  வேண்டுகோளுக்கு இணங்க  HNFC வங்கியின் 25வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையிலும்  இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமில்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  விவேக்  .வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,  வங்கி ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்