முதியோர்களுக்கான தேசிய கொள்கையினை தயாரித்தல் தொடர்பான நிகழ்ச்சி

(லியோன்)

முதியோர்களுக்கான தேசிய கொள்கையினை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஏற்பாட்டில்  சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக அனுசரணையில்   முதியோர்களுக்கான தேசிய கொள்கையினை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி எஸ் .எம்  .சார்ள்ஸ்  தலைமையில் (20)  வியாழக்கிழமை மட்டக்களப்பு சதுனா விடுதியில்  நடைபெற்றது .

இடம்பெற்ற செயலமர்வில்  முதியோர்களுக்கான சுகாதாரம் மற்றும் போசனை , கல்வி , சமூகவியல் மற்றும் கலாசாரம் , பொருளாதாரம் ,பாதகாப்பு  ஆகிய தலைப்புக்களில் இந்த செயலமர்வு நடைபெற்றது .


இந்த செயலமர்வில்  மாவட்ட செயலாளர் , மேலதிக மாவட்ட செயலாளர் , உதவி மாவட்ட செயலாளர் , திட்டமிடல் பணிப்பாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள் ,  மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள் ,  பிரதேச மட்ட  முதியோர் சம்மேளன உறுப்பினர்கள் , மாவட்ட மட்ட முதியோர் சம்மேளன உறுப்பினர்கள் ,பிராந்திய சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் ,மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் , சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணி  , போக்குவரத்து முகாமையாளர்கள் , வங்கி முகாமையாளர்கள் , உலவலத்துனையாளர் , மருத்துவ , சமூகவியல் விரிவுரையாளர் , பொலிஸ் அத்தியட்சகர் தபால்மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.