மட்டக்களப்பு நீதிமன்றில் நவராத்திரி தின நிகழ்வு

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் ஏற்பாட்டில் நவராத்திரி தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நவராத்திரி நிகழ்வில் நிதிமன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் கலை நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.