(லியோன்)
கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தின விழாவும் , கல்லூரி ஸ்தாபகர்களின்
சிலை திறப்பு நிகழ்வும் இன்று கல்லூரியில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா
வித்தியாலய ஆசிரியர் தின விழாவும் , கல்லூரி ஸ்தாபகர்களின் சிலை திறப்பு நிகழ்வும்
இன்று மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த
மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர்
திருமதி ஹரிதாஸ் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும்
,ஆசிரியர்களையும் ஊர்வலமாக அழைத்து
வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இப் பாடசாலை தாபகர்களான .க .கதிர்காமத் தம்பி
உடையார் மற்றும் கு .சபாபதிப் பிள்ளை
உடையார் ஆகியோரின் உருவ சிலைகள் குடும்ப உறவினர்களினால் திறந்து வைக்கப்பட்டது .
தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும்
வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .
இந்நிகழ்வில் கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத்
சுவாமீ பிரபு பிரேமானந்தஜி மகராஜ் ,
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம் .உதயகுமார் , மட்டக்களப்பு வலயக்கல்விப்
பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் , மற்றும் கல்லூரி ஸ்தாபர்களின் குடும்ப
உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்