(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது 64 வது
பிறந்த தினத்தை இன்று வெகுவிமர்சையாக
கொண்டாடினர்
ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்
எகெட் கரித்தாஸ் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களின் ஏற்பாட்டில் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் சிறப்பு
நிகழ்வு இன்று மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள் , எகெட்
நிறுவன ஊழியர்கள் ,அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் என பலர் கலந்துகொண்டு தமது
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்