பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணித பாட பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு

 (லியோன்)

2016 ஆம் ஆண்டு கல்வி பொது தரம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பு மாவட்ட  பாடசாலை மாணவர்களுக்கான கணித பாட  பயிற்சி கையேடு  வழங்கும் நிகழ்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனை வழிகாட்டலின்  மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன்  தலைமையில் க .பொ .த . சாதாரண தரம் கணித பாட  மாணவர்களுக்கான  “இந்து விழி “ எனும் தலைப்பிலான கணித பாட பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில்  இடம்பெற்றது .


யாழ் இந்துகல்லுரியின் பழைய மாணவர்களின்   அனுசரணையில்  கல்வி பொது தரம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தமிழ் மொழி மூல  மட்டக்களப்பு மாவட்ட  பாடசாலை மாணவர்களுக்கு  வருடந்தோறும் வழங்கப்படுகின்றது   

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை  மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் “ரேஸ் போ  எடிவுகேஷன் “ ( கல்விக்கான ஓட்டம் ) திட்டத்தின் கீழ் இக்கையேட்டினை  இலவசமாக வழங்கி வருகின்றனர்  .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர்  எ .சுகுமாரன் . வலயக்கல்வி பணிப்பாளர்கள் ,    வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் கணித பாட  ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .