மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் எதிர்வரும் புதன்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் குறுஞ்செய்திகள் மூலம் எதிர்வரும் புதன்கிழமை காலை 9.00மணிக்கு காந்தி பூங்கா முன்பாக அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் தங்களது தொழில்வாய்ப்புகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.அதற்கு அரசியல் தலைவர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதனை வலியுறுத்தியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் குறுஞ்செய்திகள் மூலம் எதிர்வரும் புதன்கிழமை காலை 9.00மணிக்கு காந்தி பூங்கா முன்பாக அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் தங்களது தொழில்வாய்ப்புகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.அதற்கு அரசியல் தலைவர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதனை வலியுறுத்தியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.