தும்பங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


தும்பங்கேணி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சிறிய ட்ரக் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவரில் ஒருவர் பழுகாமத்தினை சேர்ந்த க.கந்தையா(80வயது),குருக்கள்மடத்தினை சேர்ந்த ஓய்வுபேற்ற கிராம சேவையாளரான த.கோணேஸமூர்த்தி (64வயது)என்ற இருவருமே படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகாக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.