2016 ஆண்டுக்கான பிரதிபா பிரபா விருது பெற்ற அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடைபெற்றது .
தேசத்தின் சிறார்களை எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக
முகம்கொடுக்கத் தேவையான நிபுணத்துவம் மிக்க பரிபூரண நற்பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க சிறந்த
தலைமைத்துவத்தை வழங்கி பாடசாலையை வெற்றிகரமாக வழிநடாத்தும் அர்பணிப்பு மிக்க
சேவையினை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் அதிபர் ,ஆசிரியர்களுக்கு பிரதிபா
பிரபா விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்
இந்நிகழ்வு உலக ஆசிரியர்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் 05.10.2016 புதன்கிழமை
கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு
விருதுகளை வழங்கி வைத்தார் .
இந்த விருதை பெற்ற மட்டக்களப்பு மகாஜன கல்லூரி அதிபர் திருமதி . என் .
துரைராஜசிங்கம் அதிபரை கல்லூரி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் கௌரவிக்கு நிகழ்வு இன்று கல்லூரியில்
நடைபெற்றது .
இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்லூரி
அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு அதிபருக்கு வாழ்த்துக்கள்
தெரிவுத்துக்கொண்டனர்