(லியோன்)
உலக ஆசிரியர் தினத்தை
சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய
ரீதியில் பாடசாலை மட்டத்தில் சிறப்பு
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது .
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று காலை கல்லூரி
மண்டபத்தில் அதிபர் அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்வானது
கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர்
,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் .
ஆரம்ப நிகழ்வாக ஆசிரியர்களை
மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக
மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .
அதனை தொடர்ந்து மங்கள
விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
சமூகத்திற்கும்
நாட்டுக்கும்
நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக
இருக்கின்ற ஆசிரியர்களை
கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது .
இந்நிகழ்வில் கல்லூரி
ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ டி . சரவணபவன் சர்மா
கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கல்லூரி அபிவிருத்தி
குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்