மட்டக்களப்பு இந்து கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

(லியோன்)

உலக ஆசிரியர் தினத்தை  சிறப்பிக்கும் வகையில்  நாடளாவிய ரீதியில்  பாடசாலை மட்டத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது .


இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு  இந்து கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு  இன்று காலை  கல்லூரி மண்டபத்தில் அதிபர் அருள்பிரகாசம்  தலைமையில் நடைபெற்றது

 இந்த நிகழ்வானது கல்லூரி மாணவர்களின்  ஏற்பாட்டில் அதிபர் ,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் .

ஆரம்ப நிகழ்வாக ஆசிரியர்களை மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு   ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு மாணவர்களின்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .

சமூகத்திற்கும்  நாட்டுக்கும்  நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது .


இந்நிகழ்வில் கல்லூரி ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் ஆலய குருக்கள்  சிவஸ்ரீ  டி . சரவணபவன்  சர்மா   கல்லூரி  அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்