(லியோன்)
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி
உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வாணி விழா சிறப்பு
பூஜை நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு புளியந்தீவு வங்கியில் நடைபெற்றது
கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக
இந்த நவராத்திரி தின ஒன்பது நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட புளியந்தீவு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் வாணி விழா சிறப்பு
பூஜைகள் மிகவும் சிறப்பாக வங்கி முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது
நடைபெற்ற வாணி விழா பூஜை நிகழ்வுகளில் சமுர்த்தி முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் , வங்கி வெளிக்கள உத்தியோகத்தர்கள் , வங்கி கட்டுப்பாட்டுப் சபை உறுப்பினர்கள் , சமுர்த்தி பயனாளிகளின் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .