திருத்தொண்டர்களை திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி சடங்கு

(லியோன்)

திருத்தொண்டர்களை  திருநிலைப்படுத்தும் விசேட  திருப்பலி  டங்கு  இன்று மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு  மறை கோட்டத்தின்  அக்கரைப்பற்று  தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்  அன்ரனி டிலிமா,, பெரியகல்லாறு தூய அருளானந்தர் ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்   இருதயநாதன் ஜெமில்டன் , சகாயபுரம்  தூய சதா சகாய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்  ஜோசெப் நிகஸ்டன்  ஆகிய மூன்று அருட்சகோதரர்களை திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தும்  விசேட திருப்பலி திருச்சடங்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்  இன்று  மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் நடைபெற்றது  .

 இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,   திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட  அருட்சகோதரர்களின் பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் .