மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் நடைபெற்ற மாபெரும் கலைகலாசார நிகழ்வு

மட்டக்களப்பு பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் (சிவில் உத்தியோகத்தர்கள்) நடைபெற்ற மாபெரும் கலைகலாசார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இன்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் மா.மேகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஜாயக்கொட ஆராய்ச்சி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக  மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன, பொலிஸ் அலுவலக முன்னாள் கணக்காளர் கே.ரவீந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொலிஸ் அலுவலக நலன்புரிச்சங்கத்தின் ஆலோசகரும் பொலிஸ் அலுவலக கணக்காளருமான ரி.சபேசனின் நெறியாள்கையின் கீழ் இந்த கலைகலாசார நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு கிராமிய மற்றும் கலை கலாசார நிகழ்வுகளுடன் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றன.

இதன்போது கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.