சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டு நியுஸ் இணையத்தளம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது .

(லியோன்)

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குற்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் முதலாம்  குறுக்கு வீதியில்   பழுதடைந்த நிலையில்  ஆபத்தை விளைவிக்க கூடிய  நிலையில் காணப்பட்ட மின் கம்பம் தொடர்பாக கிராம மக்களால் பல விமர்சன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன .

இது  தொடர்பான செய்தியினை  கடந்த 19ஆம் திகதி மட்டு நியுஸ் இணையத்தளம்  ஊடாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக  உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் .

குறித்த  மின் கம்பத்தை  அகற்றி  புதிய மின் கம்பத்தை மாற்றியமைக்கு சம்பந்தப்பட்ட  மட்டக்களப்பு மின்சார சபை அதிகாரிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும்  மட்டு நியுஸ் இணையத்தளம்   தமது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது .