கிழக்குமாகாண கல்வி அமைச்சரினால் மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
நாட்டை அறிவின் கேந்திரமாக அபிவிருத்தி செய்யும் நோக்காக கொண்டு 1000 இடைநிலைப் பாடசாலைகளையும் 5000 ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட 1000 பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி
வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா
வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை வித்தியாலய அதிபர் தி .புலேந்திரகுமார் தலைமையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எஸ்
.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக
கலந்துகொண்டு 28.07.2016 வியாழக்கிழமை திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா
.ஸ்ரீநேசன் , கிழக்குமாகாண சபை தவிசாளர் இந்திரகுமார்
பிரசன்னா . மாகாண சபை உறுப்பினர்களான இரா
.துரைரட்ணம், எம் .நடராஜா , கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,
மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே . சத்தியநாதன் மற்றும் கல்வி வலய
பணிப்பாளர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள், பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்.