(லியோன்)
மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் தாமரைத்தீவானின் பொன்னகம் மீட்போம் எனும் நூல் வெளியீட்டு விழா 28.07.2016 மாலை நடைபெற்றது.
மகுடம் கலை இலக்கிய வட்ட ஆலோசகர் பேராசிரியர் சி
.மௌனகுரு தலைமையில் மட்டக்களப்பு மாநகர
சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
பி எஸ் .எம் . சார்ள்ஸ் கலந்துகொண்டார்.மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் தாமரைத்தீவானின் பொன்னகம் மீட்போம் எனும் நூல் வெளியீட்டு விழா 28.07.2016 மாலை நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றளுடன் தமிழ்
மொழி கீதம் பாடப்பட்டது அதனைத்தொடர்ந்து மகுடம் கலை இலக்கிய வட்ட ஆலோசகர் பேராசிரியரின்
தலைமை உரையுடன் கவிஞர் தாமரைத்தீவானின் பொன்னகம் மீட்போம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள் ,அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள், இலக்கியவாதிகள் ,அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .