(லியோன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் வரும் 10 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு
விஜயம் செய்யவுள்ளார்
மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தையும் மற்றும்
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தையும் திறந்து வைக்கவுள்ளார் .
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் மற்றும் வெபர்
மைதானாத்தை அன்றிய பகுதிகள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் வழிகாட்டலுக்கு
அமைவாக மாநகர சபையினால் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கை பணிகளில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களும் ,உத்தியோகத்தர்களும்
ஈடுபட்டுவருகின்றனர்