19வது அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல்

 (லியோன்)

அரசியலமைப்புக்கான திருத்தங்களோடு மேம்படுத்தப்பட்ட பிரஜைகளின் சுதந்திரம் தொடர்பான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 19வது அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு  தெளிவு படுத்தும்  கலந்துரையாடல் அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய இணையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு இணையம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது .

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தரிக் குழுவானது 2016  ஜனவரி 05ஆம் திகதி முதல் முறையாக ஒன்று கூடி குறிகிய காலத்திற்குள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களுக்கான  அமர்வுகளை நடத்தி பொதுமக்களின் கருத்தாலோசனைகளை பெற்றிருந்தது .

இதன் போது இருபது அடிப்படை விடயங்களில் பொதுமக்களின் கருத்தாலோசனைகள் பெறப்பட்டது .

இதன் கீழ் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பகுப்பாய்வு செய்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையானது அரசியலமைப்பு  சீர்திருத்தம் தொடர்பான கருத்தரிக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .

இக்குழுவின் அறிக்கை  310 பக்கம் வரை காணப்படுகின்றது , இந்த பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு  தெளிவு படுத்தும்  கலந்துரையாடல் அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய இணையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை  மட்டக்களப்பு இணையம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது .


இந்த கலந்துரையாடலில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்  லயனல் குறுக்கே , சட்டத்தரணி எஸ் .ஜி . புஞ்சி ஏவா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்