மட்டக்களப்பு இருதயபுரம் சமுர்த்தி வங்கியின் வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் இலக்கியப் போட்டி நிகழ்வு (VIDEO & PHOTOS)


(லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் சமுர்த்தி வங்கியின் வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில்  நடாத்தப்படும்
2016 ஆம் ஆண்டுக்கான கலாசார இலக்கியப் போட்டி நிகழ்வு  18.06.2016 இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் சமுர்த்தி வங்கியினால்  வலய மட்ட பாடசாலை மானவார்களுக்கிடையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார திணைக்கள ஏற்பாட்டில்   நடாத்தும்  கலாசார இலக்கிய போட்டி பரீட்சைகள் இன்று மட்டக்களப்பு  கொக்குவில் சிறுவர் நேய மாதிரிக்கிராம மண்டபத்தில்  இருதயபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் செல்வி .பி . சாமினி  தலைமையில் இன்று இடம்பெற்றது .

இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கவிதைப்பாடல்கள், கையெழுத்துபோட்டி ,கவிதை , கட்டுரை , பாடல் நயத்தல் ஆகியவற்றுக்கான  போட்டிகள் இடம்பெற்றது .
சமுர்த்தி வலய வங்கி மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கலாசார இலக்கிய போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்  பிரதேச செயலக  மட்டத்திலும் அதனை தொடர்ந்து மாகான  மட்டத்திலும்  இடம்பெறவுள்ள இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் .


இன்று  மட்டக்களப்பு  கொக்குவில் சிறுவர் நேய மாதிரிக்கிராம மண்டபத்தில்  இடம்பெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வங்கி வலய மட்ட கலாசார  இலக்கிய போட்டி பரீட்சை நிகழ்ச்சியில் வங்கி முகாமையாளர் . சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி பயனாளிகள் , பயனாளிகளின்  பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .