மட்டக்களப்பு பாலமீன்மடு
புதுமைமிகு குழந்தை இயேசு ஆலய வருடாந்த
திருவிழாவை முன்னிட்டு இன்று விசேட திருப்பலியுடன் புதுநன்மை ,உறுதிப்பூசுதல்
அருள் அடையாளங்கள் வழங்கப்பட்டது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு விசேட
திருப்பலியுடன் புதுநன்மை ,உறுதிப்பூசுதல் அருள் அடையாளங்கள் பங்கு மாணவர்களுக்கு மறை மாவட்ட ஆயர் கலாநிதி
பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் 18.06.2016 வழங்கப்பட்டது
ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு ஒப்புகொடுக்கப்படவுள்ளது.
ஆலய திருவிழா கடந்த 10.06.2016 வெள்ளிக்கிழமை மாலை பங்குதந்தை சி .வி . அன்னதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு
அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை மாலை குழந்தை இயேசுவின் திரு உருவம் பவனியும்
தொடர்ந்து விசேட திருப்பலி ,திவ்விய
நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெறவுள்ளது .
19.06.2016 ஞாயிற்றுக்கிழமை நாளை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு வீச்சுகல்முனை
பங்குதந்தை எக்ஸ் .ஐ , ரஜீவன் தலைமையில்
இடம்பெறவுள்ள விசேட திருநாள்
திருப்பலியுடன் ஆலய முன்றலில் இடம்பெறும்
விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய
திருவிழா திருநாள் கொடி இறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும்